ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: ஜன.7-ல் இளவரசியிடம் விசாரணை
பெங்களூரு: முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில்,நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி வரும் 7ஆம் தேதி நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்து விட்டார். ஜெயலலிதாவின் தோழியும் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா கடந்த மாதம் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனிடம் அண்மையில் 914 கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உடல்நலக் கோளாறு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி இளவரசி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளவரசியின் பதில்கள் பதிவு செய்யப்பட்டதும், இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications