சொந்தக் கட்சி தொடங்கினார் பி.ஏ.சங்மா! பாஜக கூட்டணியில் ஐக்கியம்!

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பி.ஏ.சங்மா, சோனியாவின் தலைமையை எதிர்த்தார். பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவர் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகினார்.
தற்போது தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை இன்று முறைப்படி தொடங்கியிருக்கிறார். இக்கட்சிக்கு புத்தகம் சின்னமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறோம் என்றும் சங்மா கூறியுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சங்மாவின் மகள் அகதா, அடுத்த லோக்சபா தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்றும் அறிவித்திருக்கிறார் அவர். ம்ணிப்பூர் மாநில சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலும் ரெடியாக இருக்கிறது என்று அதிரடியை வீசியிருக்கிறார் சங்மா.












Click it and Unblock the Notifications