சென்னையில் நாகாலாந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- ஹோட்டல் நிர்வாகி கைது
சென்னை: சென்னையில் நாகாலாந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக எழும்பூர் ஹோட்டல் நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எழும்பூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் மேலாளர் இளஞ்செழியனிடம் நாகாலாந்தை சேர்ந்த ஜின்டுயி ரிதா என்பவர் கடந்த மாதம் 28-ந் தேதி வேலைக்கேட்டு சென்றிருக்கிறார். அவரிடம் வேலை தருவதாக இளஞ்செழியன் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் தங்குவதற்காக சில பொருள்களை வாங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். உடனே ரிதாவை காரில் வருமாறும் பொருள்கள் வாங்கும் கடையில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரிதா, காரில் புறப்பட்டுள்ளார். அப்போது இளஞ்செழியன் காரை மெரினா கடற்கரைக்கு கொண்டு சென்று ரிதாவிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இது குறித்து ரிதா தம்மை சென்னைக்கு அழைத்து வந்த நபரிடம் கூறியுள்ளார். பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகார் எழும்பூர் காவல்நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட ஹோட்டல் நிர்வாகி இளஞ்செழியன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications