மலேசியா: 2-ம் உலகப் போரின் ‘சயாம் மரண ரயில் பாதை’ வாரிசுகளுக்கு ஜப்பான் கொடுத்த நிதி எங்கே?
கோலாலம்பூர்: 2-ம் உலகப் போரின் போது தாய்லாந்து- பர்மா இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிக்கான ஜப்பானியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கான நிதியை மலேசிய அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்பியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது (1942-46) தாய்லாந்தின் சயாமுக்கும் பர்மாவின் யங்கூனுக்கும் இடையே 415 கிலோ மீட்டர் ரயில் பாதை அமைக்க ஜப்பான் திட்டமிட்டிருந்தது. இதற்காக இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட லட்சக்கண்க்கானோரை ஜப்பானிய படைகள் ஈடுபடுத்தியது. அவர்களுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து கொடுக்காமல் அவர்களை ஈவிரக்கமின்றி நடத்தின ஜப்பான் படைகள்.
லட்சக்கணக்கானோரை பலி கொண்டு வரலாற்றின் பக்கங்களில் ‘மரண ரயில் பாதை'யாக பதிவாகி இருக்கிறது.. இந்த ரயில் பாதைக்காக பயன்படுத்தப்பட்டோருக்கு ஜப்பான் அரசு நிதி உதவி அறிவித்து 1990களில் மலேசிய அரசிடமும் கொடுத்தது. ஆனால் இதுவரை அந்த நிதி உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில் பாதைக்காக உழைத்தோரின் வாரிசுகள் சங்கம் அமைத்தும் போராடி வருகின்றனர்.
இது தொடர்பாக பேராக்கின் முன்னாள் அமைச்சர் புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின் கூறுகையில், அப்பணத்தை அரசாங்கம் இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறதா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டதா என்பது தெரியவில்லை. ஆவணங்களின்படி உயிருடன் திரும்பிவந்த 30,000 பேரில் 60விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 20விழுக்காட்டினர் இந்தியர்கள், 15 விழுக்காட்டினர் சீனர்கள் 5 விழுக்காட்டினர் இதர இனங்களைச் சேர்ந்தவர் என்றார்.












Click it and Unblock the Notifications