டெல்லியில் குளிரில் நடுங்குபவர்களுக்காக போர்வை சேகரிக்கும் சரத்குமார்

வட இந்தியாவில் கடுங்குளிராக உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த 44 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குளிர் வாட்டி வதைக்கிறது. வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வீடில்லாமல் குளிரில் வாடும் மக்களுக்காக சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் போர்வைகள் சேகரித்து வருகிறார்.
இது குறித்து அவர் என்டி டிவி்க்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
காஷ்மீர் மக்கள் கூட கடுங்குளிரால் வாடுவது வருத்தம் அளி்க்கிறது. என்டி டிவியின் முயற்சியைப் பார்த்த பிறகு நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் 800 முதல் 1,000 போர்வைகளை சேகரித்து உங்கள் சென்னை அல்லது டெல்லி அலுவலகத்தில் கொடுக்கிறோம் என்றார்.
இது குறித்து சரத்குமாரின் டுவீட்:
டெல்லியில் குளிரால் வாடும் குடும்பங்களுக்கு, உடன்பிறப்புகளுக்கு போர்வையை தானமாகக் கொடுப்போம். குளிரைப் போக்க பணம் வேண்டாம் வெறும் போர்வை கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications