Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி பாலியல் பலாத்காரம்- 5 குற்றவாளிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள 5 குற்றம் சாட்டப்பட்டோருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட்டது.

டெல்லியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவனுக்கு வயது 17 என்று கூறப்படுவதால் அவனை மட்டும் வழக்கிலிருந்து பிரித்து சிறார் முகாமில் அடைத்துள்ளனர்.

மற்ற 5 பேர் மீதும் டெல்லி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி முன்பு வந்தது. அப்போது விசாரணையை ரகசியமாக நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மூடிய அறைக்குள் விசாரணை நடந்தது.

நீதிபதி முன்பு குற்றவாளிகள் 5 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+