ஆந்திரா: மதமோதலை தூண்டும் பேச்சு- ஓவாஸி கைது!!
ஹைதராபாத்: மதமோதலை தூண்டும் வகையில் பேசிய ஆந்திராவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கும் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி இன்று கைது செய்யப்பட்டார்.
இந்துக்களைக் கொல்வேன் என்ற வகையில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. ஓவாஸி பேசியிருந்தார். பின்னர் அவர் லண்டன் சென்றுவிட்டார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் லண்டனில் இருந்து நேற்று ஓவாஸி ஹைதராபாத் வந்திறங்கினார். போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்த உத்தரவிட்டிருந்த நிலையில் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் 4 நாட்கள் அவகாசம் தேவை என்று அவர் கோரியிருந்தார்.
மேலும் தமது மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் ஓவாஸி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று காலை ஓவாஸி ஹைதராபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 11 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரால் நீண்ட தூரம் நடக்க முடியாது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.
பின்னர் இன்று அவர் கைது செய்யப்பட்டார். ஓவாஸி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications