டெல்லியில் மேலும் ஒரு பலாத்காரம்- 20 வயது பெண்ணைக் கற்பழித்த ஐவர்- 3 பேர் சிக்கினர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏற்கனவே 23 வயது பிசியோதெரப்பி மாணவி மோசமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பதட்டமே இன்னும் தணியாத நிலையில் டெல்லி அருகே மேலும் ஒரு பெண் ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்ணுக்கு வயது 20. அலிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். ஜனவரி 1ம் தேதி இப்பெண் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போதுதான் விவகாரம் வெளியே வந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். 2 பேரைத் தேடி வருகின்றனர்.

யோகேந்தர், சுனில்குமார், ராகுல் ஆகியோர்தான் கைது செய்ய்பட்டவர்கள் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஐந்து பேருமே அப்பெண்ணுக்குத் தெரிந்தவர்களாம். ஆனால் சம்பவத்தன்று ஐந்து பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஜனவரி 6ம் தேதிதான் அப்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ஐந்து பேரும் சேர்ந்து அப்பெண்ணை ஒரு காரில் கடத்தினர். பின்னர் திக்ரிகுர்த் என்ற இடத்தி்ல வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+