சட்டீஸ்கரில் 11 மாணவிகள் பலாத்காரம்… ஆசிரியர், வாட்ச்மேன் கைது
சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு விடுதியில் தங்கியிருந்த 11 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர், வாட்ச்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கான்கேர் மாவட்டத்தில் நஹர்புர் பகுதியில் அரசுப்பள்ளி உள்ளது. அங்குள்ள பழங்குடியின மாணவிகளுக்கான விடுதியில் 75 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் 11 பேரை மானுராம் கோடா என்ற ஆசிரியரும், தீனாராம் என்ற வாட்ச்மேனும் ஓர் ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தனர் என்பது புகாராகும்.
இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சமூக ஆர்வலர்கள் மாணவிகளை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த உடன் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கான்கர் நகர சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆசிரியர், வாட்ச் மேன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் மைனர் என்பதால் அவர்கள் உடனடியாக கான்கர் நகர விடுதிக்கு மாற்றப்பட்டனர்.
டெல்லி பாலியல் வன்கொடுமையை அடுத்து நாடுமுழுவதும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications