கனடாவைத் தொடர்ந்து இங்கிலாந்து அமைச்சர் இலங்கை செல்கிறார்!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் விரைவில் அந்நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் முகாமிட்டிருக்கும் கனடாவின் குடியுரிமை அமைச்சர் ஜாசன் கென்னி, மனித உரிமைகள் தொடர்பில் அந்த நாட்டை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதனால் அவரை மிகக் கடுமையாக இலங்கை அரசுத் தரப்பு விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் மனித உரிமை நிலைமைகளை நேரில் சென்று ஆய்வு நடத்துவதற்காக இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்டர் பார்ட் விரைவில் அந்த நாட்டுக்குச் செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகத் தமிழர் பேரவையுடன் தொடர்பில் உள்ள இங்கிலாந்து எம்.பி. மெக்டொனாவுக்கு, அந்நாட்டு செயலாளர் வில்லியம் ஹேக் எழுதியுள்ள கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications