வறட்சியால் சோகம்- திருப்பூர் அருகே விவசாயி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாதேகவுண்டம் பாளையத்தில் தண்ணீரின்றி பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் நொந்த விவசாயி சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பல்லாங்காட்டுத் தோட்டம் என்ற இடத்தில் சுப்பிரமணியனின் நிலத்தில் வறட்சியால் விவசாயம் பொய்த்து, வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. வங்கியில் இருந்து கடனைக் கட்டாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாம்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பூச்சி மருந்தைக் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications