மின் வெட்டு ஓ.கே... 'சொல்லிட்டு' செய்யக் கோரி மதுரையில் 9ம் தேதி பந்த்
மதுரை: தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரான மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரையில் ஜனவரி 9ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பையும், அழைப்பையும் மதுரை தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 2 மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. அதேசமயம், தமிழகத்தின் இதரப் பகுதிகளில் குறைந்தது 10 மணி நேரம் மின்தடை அமல்செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என சகல தரப்பினரும் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
பல மாதங்களாக நீடித்து வரும் இந்த தொடர் மின்வெட்டால் தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக மினவெட்டை அமல்படுத்த வேண்டும், சென்னைக்கு ஒன்று, பிற பகுதிகளுக்கு ஒன்று என்று இல்லாமல், இருக்கிற மின்சாரத்தை அனைவருக்கும் சமமாக பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஜனவரி 9ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications