வேலூரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை: பால்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பால் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியாத்தம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று காலை பள்ளி செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.அப்போது அங்கு வந்த பால் வியாபாரி வெங்கடேசன், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி கூச்சல் போட்டதால், அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் பால் வியாபாரி வெங்கடேசனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீஸார், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெங்கடேசன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications