தூத்துக்குடியில் ரேஷன் கடை ஊழியரை செருப்பை கழற்றி அடித்த பெண்: பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரேஷன் கடை ஊழியரை பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரியைச் சேர்ந்த தமிழழகன்(52) தூத்துக்குடியில் உள்ள கால்டுவெல் காலனியில் இருக்கும் அமுதம் சிறப்பு அங்காடியில் பட்டியல் எழுத்தராக உள்ளார். ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டுவதற்காக கால்டுவெல் காலனியைச் சேர்ந்த உத்ரம்(50) என்ற பெண் அந்த அங்காடிக்கு வந்துள்ளார். உள்தாள் ஒட்டினால் தான் பொங்கள் பொருட்கள் கிடைக்கும் என்ற வதந்தியால் அந்த கடையில் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் உத்ரம் கொண்டு வந்த ரேஷன் கார்டு அவரது மகன் பெயரில் இருந்ததால் அட்டைதாரர் நேரில் வர வேண்டும் என்று தமிழழகன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உத்ரம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே உத்ரம் தனது காலில் கிடந்த செருப்பை எடுத்து தமிழழகனை அடித்தார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழழகன் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் விசாரிப்பதற்காக போலீசார் உத்ரத்தை தேடி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications