தந்தையின் பல வருட பாலியல் பலாத்காரம், இன்னொருவருடன் உறவு-பரிதாபத்துக்குரிய மாலத்தீவு சிறுமி

Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவில் வளர்ப்புத் தந்தையால் பல வருடம் பாலியல் பலாத்கார சித்திரவதைக்குள்ளான 15 வயது சிறுமி, இன்னொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததற்காக தற்போது சவுக்கடி தண்டனைக்குள்ளாகவுள்ளார்.

மாலத்தீவைச் சேர்ந்த அந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை பல காலமாக தனது மகளை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து வந்தார். இதன் விளைவாக அந்த சிறுமிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தையை தந்தை கொன்று புதைத்து விட்டார்.

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு உறவு வரை போய் விட்டது. இதையடுத்து அவர் மீது அந்த ஊர் போலீஸார் வழக்குப் போட்டனர். இஸ்லாமியச் சட்டப்படி திருமணமாகாத பெண் வேறு ஒருவருடன் உறவு கொள்வது தவறு என்பதால் சிறுமி மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவருக்கு சவுக்கடி தண்டனையும் தரப்படவுள்ளது. சிறுமி தற்போது மைனர் என்பதால் 18 வயது நிரம்பியதும் அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.

தற்போது சிறுமியின் தந்தை செய்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஆகியவை ஒரு வழக்காகவும், சிறுமி இன்னொரு ஆணுடன் உறவு வைத்திருந்தது தனி வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+