பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை: ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை
டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுகாப்பு குறித்த ராணுவ உயர் அதிகாரிகளின் கூட்டம் இன்று ரஜௌரியில் நடைபெற்றது.
பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் உள்ள மெந்தார் செக்டருக்குள் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய 2 வீரர்கள் பலியாகினர். அதில் ஒரு வீரரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளது பாகிஸ்தான் படை. ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சாதிக்கிறது பாகிஸ்தான். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீரை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானின் மனிதநேயமற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இது குறித்து பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு எச்சரிக்கையும் விடுத்தார்.
இதற்கிடையே பாதுகாப்பு குறித்து விவாதிக்க ராணுவ அதிகாரிகளின் உயர் மட்ட குழு கூட்டம் இன்று பிற்பகல் 25 இன்பான்ட்ரி பிரிவின் தலைமையகமான ரஜௌரியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அனைத்து பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கொல்லப்பட்ட ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகியோரின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications