Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வறட்சி பாதித்த டெல்டா விவசாயிகளின் போராட்டம் சூடு பிடிக்கிறது - 3வது நாளாக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

Cauvery farmers
தஞ்சாவூர்: காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும், தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சூடு பிடித்துள்ளது. 3வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

கொட்டும மழையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து இடங்களிலும் முறையாக செயல்படுத்த வேண்டும்.

விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 7- ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் முதல் விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 2-வது நாளாக நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வருகிற 11- ந் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. தஞ்சையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடடனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் போராட்ட குழுவினர் அமர்ந்திருந்தனர்.

அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமான பதில் வராவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+