கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம்: போலீசார் தீவிர விசாரணை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது என டி.ஐ.ஜி. சுமித் சரண் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் ரஷ்ய அரசு உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்தன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் வந்தது. இது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரித்து வழக்குப் பதிவு செய்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என விசாரணை நடக்கிறது. இதன் எதிரொலியாக அணு மின் நிலைய மெயின் கேட், செட்டிகுளம் டவுன்ஷிப்பிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இது குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. திருக்குறுங்குடி அருகே முறைகேடாக வேட்டையில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை தேடி வருகிறோம் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications