காதலுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவனுடன் 'எஸ்' ஆன நர்சரி ஸ்கூல் 'மிஸ்'!

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: மதுரையை சேர்ந்த நர்சரிப்பள்ளி ஆசிரியை ஒருவர் கல்லூரி மாணவருடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை இந்திரா நகரில் வசிப்பவர் அந்தோணிசாமி. இவரது மகள் ஜெனிபர் வயது 18. இவர் நர்சரி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை . தனது மகளை கடத்தி கட்டாய திருமணம் செய்திருக்கலாம் என்றும் மீட்டுத்தரவேண்டும் என்றும் அந்தோணிசாமி மதுரை தல்லாக்குளம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து தல்லாக்குளம் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் பெண்ணின் படத்தை அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் கொடைக்கானல் ஏரி பகுதியில் ஒருவருடன் இருப்பது தெரிந்தது.

அங்கு சென்ற போலீசார், இருவரிடமும் விசாரணை செய்ததில், அந்த வாலிபர் மதுரை சிந்தாமணி ரோடு பகுதியில் வசிக்கும் அருள் பிரகாசத்தின் மகன் ஆண்ட்ரூஸ்ஜோன்ஸ்,19, என்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வீட்டை விட்டு கொடைக்கானலுக்கு ஓடி வந்துவிட்டதாக கூறினர்.

இதனையடுத்து கொடைக்கானல் போலீசார், இருவரின் பெற்றோர்களையும் அங்கு வரவழைத்தனர். ஸ்டேஷன் வாசலில் காதலர்களின் பெற்றோர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், தல்லாகுளம் போலீசார் முன்னிலையில் காதலர்களை ஒப்படைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+