பலாத்கார சம்பவம்: கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய டெல்லி போலீஸ்
டெல்லி: ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடமை தவறியதற்காக உயர்நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மன்னிப்புக் கோரினர்.
டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு அவரது நண்பருடன் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தின் போது போலீசார் தங்களுக்கு உதவவில்லை என்றும் மோசமாக நடந்து கொண்டதாகவும் மாணவியின் ஆண் நண்பர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பலாத்கார சம்பவம் குறித்த விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான போலீசார், சம்பவ நாளன்று இரவு தாங்கள் நடந்து கொண்ட விதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசாரின் பெயர் பட்டியலும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது குற்றவாளிகள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை பார்க்க பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அறைகள் மூடப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருந்து விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வழக்கு விசாரணை தினமும் நடத்தப்பட்டு அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications