ஏழைகளுக்கு வெறும் 4% வட்டியில் வங்கிக் கடன்: ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகவைக் குழு, பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 12,517 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஏழைகளுக்கு ரூ.20,000 வரை 4% வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படும். மேலும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கான நிதி உதவி உயர்த்தப்படும். கிராமங்களில் வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ. 70,000 ஆக உயர்த்தப்படும்.
பொதுத்துறை நிறுவனமான என்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 800 கோடி கிடைக்கும். அதே நேரத்தில் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை மறுசீரமைக்க ரூ. 200 கோடி முதலீடு செய்யும் திட்டத்தின் மீதான முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications