உ.பியில் 2 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
முஸாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி மாணவி பலாத்கார சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
இதனையடுத்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ் பாலியல் குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புசட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் போபா பகுதியில் கடந்த நவம்பர் 11ம் தேதி 2 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைதான அதேஷ் குமார் என்பவன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை முஸாபர் நகர் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலித்த குற்றத்திற்காக தங்கையை கவுரவக்கொலை செய்த இளைஞர் ஒருவரும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications