இளம் பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யதாக புகார் கூறப்பட்டதை அடுத்து உதவி சப் -இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் ஹரே தெரு போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவர் அங்குள்ள பெனியாபுக்கூர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை, கற்பழித்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொல்கத்தா துணை போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் அளித்தார். .
இந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, துணை கமிஷனர் சத்யஜித் பானர்ஜி உத்தரவின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications