பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் உடனே நிவாரணம் வழங்க வேண்டும்: திருமாவளவன்
சென்னை: வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரும் கருகிய நிலையில் முற்றிலுமாக வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் விவசாயிகள் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு கடந்த மூன்று நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு ஏக்கர் 1க்கு ரூபாய் 25,000ம் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 10,000ம் நிவாரணமாக வழங்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துப் போராடி வருகின்றனர்.
மூன்று நாட்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டும் கூட தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக உள்ளது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் விவசாயிகளுக்கு எமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதோடு, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications