பொங்கலுக்கு 1280 சிறப்புப் பேருந்துகள்: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று தொடங்கியது. போக்குவரத்துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்து சேவையை தொடங்கிவைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க தமிழகம் முழுவதும் 5612 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி முதல் நாளான இன்று ஆயிரத்து 280 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் முன் பதிவு செய்வதற்காக 16 புதிய முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 150 ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று போக்குவரத்துத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி மக்களின் வசதிக்காக 5612 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க முதல்வர் அம்மா உத்தரவிட்டிருந்தார். இதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் 16-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை ஊரில் இருந்து திரும்பி வருவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படுகிறன்றன.
300 கி.மீட்டருக்கு அதிகம் உள்ள பகுதிகளுக்கும் ஆன்லைனில் புக்கிங் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இப்போது 28,400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.93 லட்சத்து 22 ஆயிரம் வசூலாகி உள்ளது. பொங்கலுக்கு தாராளமாக பஸ் வசதி இருப்பதால் பொதுமக்கள் எப்போது வந்தாலும் பஸ் வசதி இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்
சிறப்பு கண்காணிப்புக் குழு
பேருந்து நிலையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்துகள் அனைத்தும் மார்கெட் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடத்தில் நிறுத்தப்படும் எனவும் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க 6 சிறப்பு கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications