For Daily Alerts
Just In
ஜனவரி 28ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்… ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
சென்னை: தமிழக சட்டப் பேரவையின் 2013 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் ஆளுநர் உரை முடிந்தவுடன் பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடும். அந்த கூட்டத்தில் பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.
அனேகமாக, 5 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவித்து நடைபெறும் விவாதத்தின் முடிவில் கடைசி நாளில் முதல்வர் பதில் அளிப்பார்.
கடந்த ஆண்டு, ஜனவரி 30 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கி,மொத்தம் 5 நாட்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
The first session of the Tamil Nadu Assembly for this year will begin on January 28 with the customary address by Governor K Rosaiah.
Story first published: Saturday, January 12, 2013, 12:24 [IST]