திருப்பாச்சேத்தி ரூ. 6 லட்சம் கொள்ளை:லாக்அப்பில் தப்பியது ஒடிஷா மாவோயிஸ்ட் தளபதி!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி காவல் நிலைய லாக் அப்பில் இருந்து தப்பிய இரண்டு கொள்ளையர்களில் ஒருவன் மாவோயிஸ்ட் தளபதி என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பாச்சேத்தியை அடுத்த பச்சேரி கிராமத்தில் வங்கியில் இருந்து எடுத்து வந்த 6 லட்சம் ரூபாயை வடமாநிலக் கொள்ளையர்கள் 5 பேர் நேற்று கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களின் மூன்று பேர் பிடிபட்டனர்.

இதில் ரஞ்சன் பதான், சங்கர் ட்வைன் என்ற இரண்டு பேர் போலீசாரை தாக்கிவிட்டு லாக் அப்பில் இருந்து இன்று காலை தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் புகைப்படத்தை திருப்பாச்சேத்தி போலீசார் ஒடிசாவிற்கு அனுப்பிவைத்தனர்.

இதில் ரஞ்சன் பதான் அங்குள்ள மாவோயிஸ்ட் அமைப்பின் தளபதி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து கட்டுமானத் தொழிலாளர்கள் போர்வையில் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தென்மண்டல ஐஜி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+