இலங்கையின் முதலாவது பெண் தலைமை நீதிபதி பதவி நீக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் முதலாவது பெண் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் இன்று காலை அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இலங்கை தலைமை நீதிபதி சிராணியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ராஜபக்சேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இன்று கையெழுத்திட்ட ராஜபக்சே சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சிராணி பண்டாரநாயக்க வரும் 15-ந் தேதி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட இருக்கிறார். புதிய தலைமை நீதிபதியை ராஜபக்சே அறிவிக்க இருக்கிறார். அனேகமாக சிராணி திலகவர்த்தன அல்லது மொஹான் பீரீஸ் ஆகிய ராஜபக்சே ஆதரவாளர்கள்தான் அடுத்த தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான ராஜபக்சேவின் நடவடிக்கையை ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இலங்கையிலும் சிராணிக்கு எதிரான ராஜபக்சேவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+