இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சிங்களவர் எண்ணிக்கை 71,458!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை ராணுவத்தை விட்டு கடந்த ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் மொத்தம் 71,458 பேர் தப்பி ஓடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை ராணுவத்தினரை மேற்கோள்காட்டி கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் பணிக்குத் திரும்பத் தவறிய சிறிலங்காப் படையினரின் எண்ணிக்கை71,458. இவர்களில் 33,532 பேர் இராணுவ நடைமுறைகளின் கீழ் இலங்கை இராணுவத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ள மற்ற ராணுவத்தினரை தேடிப்பிடித்துக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications