ஊழல் வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, மகன் மற்றும் 53 பேர் கைது!
சண்டிகர்: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு என்ன?
ஹரியானா மாநிலத்தில் 1999-2000-ம் ஆண்டு 3 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக இந்திய தேசிய லோக் தள் தலைவரும் முன்னாள் ஹரியானா முதல்வருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ,அவரது மகன் அஜய் சவுதலா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அம்மாநிலத்தின் ரோகினி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்குமான தண்டனை என்பது வரும் 22-ந் தேதி தெரியவரும். வரும் 17-ந் தேதி முதல் தண்டனை குறித்த விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 62 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இதில் 6 பேர் விசாரணையின் போது இறந்துவிட்டனர். ஒருவர் மீதான குற்றம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா கைது செய்யப்பட்டார். அரியானா முன்னாள் முதல்வருடன் அவரது மகன் அஜய் சவுதாலா இருவரையும் சிபிஐ கைது செய்தது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆசியிரியர் நியமன ஊழல் வழக்கில் தொடர்புடைய மேலும் 53 பெரும் கைது செய்யப்பட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications