ஊழல் வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, மகன் மற்றும் 53 பேர் கைது!
சண்டிகர்: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு என்ன?
ஹரியானா மாநிலத்தில் 1999-2000-ம் ஆண்டு 3 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக இந்திய தேசிய லோக் தள் தலைவரும் முன்னாள் ஹரியானா முதல்வருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ,அவரது மகன் அஜய் சவுதலா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அம்மாநிலத்தின் ரோகினி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்குமான தண்டனை என்பது வரும் 22-ந் தேதி தெரியவரும். வரும் 17-ந் தேதி முதல் தண்டனை குறித்த விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 62 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இதில் 6 பேர் விசாரணையின் போது இறந்துவிட்டனர். ஒருவர் மீதான குற்றம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா கைது செய்யப்பட்டார். அரியானா முன்னாள் முதல்வருடன் அவரது மகன் அஜய் சவுதாலா இருவரையும் சிபிஐ கைது செய்தது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆசியிரியர் நியமன ஊழல் வழக்கில் தொடர்புடைய மேலும் 53 பெரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications