உ.பி.யில் நண்பரின் 6 வயது மகளை கற்பழிக்க முயன்று, கொன்ற வாலிபர்: மக்கள் ஆர்ப்பாட்டம்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் நண்பரின் 6 வயது மகளை கற்பழிக்க முயன்று அவளை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் ரவி சிங்(26). போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கமுள்ளவர். அவரும், சுந்தர் என்பவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துள்ளனர். சுந்தரின் மனைவி கடந்த 18 மாதங்களுக்கு முன்பு காசநோயால் இறந்தார். சுந்தரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ரவி தினமும் அவரது வீட்டுக்கு செல்வார்.
அப்போது சுந்தரின் 6 வயது மகளுக்கு தினமும் இனிப்புகள் கொடுப்பார். கடந்த வாரம் சுந்தர் வீட்டுக்கு சென்ற ரவியிடம் சிறுமி இனிப்பு கேட்டுள்ளார். முதலில் கடைக்கு செல்ல மறுத்த சிங் பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு ஆள்நடமாட்டமில்லா இடத்திற்கு சென்றார். அங்கு அவர் சிறுமியை கற்பழிக்க முயன்றார். ஆனால் சிறுமி கூச்சல் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த செங்கலை எடுத்து சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரவி சிங்கை கைது செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து காசியாபாத்தின் சிஹானி கேட் பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications