'அண்ணேன்னு' கூப்பிடச் சொன்ன சாமியார் அசராம் பாபு மீது ரூ. 700 கோடி நில அபகரிப்பு புகார்

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனத்துக்கு உள்ளானவர் ராஜஸ்தான் மாநில சாமியார் அசாராம் பாபு.
பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவர்களைப் பார்த்து அண்ணா என்று அழைத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்று கூறினார். இதற்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள 700 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அசாராம் பாபு மற்றும் அவரது மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெயந்த் விட்டமின்ஸ் எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை 2000-மாவது ஆண்டு முதல் அபகரித்து இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள ஒருவர் கம்பெனி விவகாரங்களுக்கான அமைச்சகத்தில் புகார் செய்ததை அடுத்து இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications