ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நெருங்கும் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு முடிவடைந்துவிட்ட நிலையில் 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

1991-96-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.63 கோடி சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் 16 ஆண்டுகால இழுத்தடிப்புக்குப் பிறகு தற்போதுதான் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவிடம் 1,384, சசிகலாவிடம் 1,032, சுதாகரன் 914,இளவரசியிடம் 651 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் பல கேள்விகளுக்கு விளக்கமான பதில்களை அளித்திருக்கின்றனர். ஆனால் சுதாகரனும் இளவரசியும் பொதுவாக 'தெரியாது' என்ற பதிலையே வாக்குமூலமாகக் கொடுத்திருக்கின்றனர்.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன் தனக்கு நடத்தப்பட்ட திருமணம் பற்றிய கேள்விக்கு கூட தெரியாது என்று பதிலளித்தார். இளவரசியோ, ஜெயலலிதாவின் புடவைகள், நகைகளில் தமது நகைகளும் உடைமைகளும் அடக்கம் என்று கூறியிருக்கிறார்.

இந்த வழக்கில் வரும் 21ம் தேதி சாட்சியங்களின் விசாரணை தொடங்குகிறது. சாட்சியங்களின் விசாரணையை விரைவாக நடத்தி மிக அதிகபட்சம் 6 மாதங்களில் தீர்ப்பளித்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம் நீதிபதி பாலகிருஷ்ணன்.

நீதிமன்ற வழக்கில் நிலையான இடம் பிடித்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக நாடே காத்திருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+