தேமுதிகவுடன் கூட்டணிக்கு ஸ்டாலின் ஆதரவு.. அதனாலேயே அழகிரி எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

Azhagiri and Stalin
சென்னை: திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்ற அறிவிப்பில் அதிர்ந்து போன அழகிரி அமைதியாக குழி தோண்டும் வேலைகளைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் கட்டமாக புதிதாக உருவாக உள்ள தேமுதிக- திமுக உறவை முறிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார் அழகிரி.

லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிகவும் இடம்பெறும் வகையில் இரு கட்சிகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது அவதூறு வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவிப்பதும் இதற்கு அந்த கட்சியினர் நன்றி தெரிவிப்பதும் என சிக்னல் கொடுக்கப்பட்டது. பின்னர் 'கலைஞர்' ஆட்சிக்காலத்தில் பெருந்தன்மையாக அவதூறு வழக்குகளே போடப்படவில்லை என்று விஜயகாந்த் பேசி நெருக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நெருக்கத்தில் தற்போது இடைவெளி "ஏற்படுத்தப்பட்டிருப்பதாக"வே கூறப்படுகிறது.

இந்த இடைவெளி ஏற்படுத்தப்பட்டது எப்படி? யாரால் ஏற்படுத்தப்பட்டது? வேறு யாருமல்ல சாட்சாத் மு.க. அழகிரிதான் என்கின்றனர் திமுகவினர். அழகிரி அப்படி என்னதான் செய்தார் என்றால் திமுக -தேமுதிக இடையே "இயல்பான" கூட்டணிக்கான சூழல் உருவாகிவரும் நிலையில், நாலைஞ்சு கேஸூக்கே ஓடி ஒழிகிறவர் கேப்டனா? என்று தேவையில்லாமல் விஜயகாந்தை கடுப்பேற்றியிருக்கிறார்.

இதற்கு முக்கியக் காரணம், விஜய்காந்துடனான கூட்டணியை ஸ்டாலின் தீவிரமாக ஆதரிப்பது தான் என்கிறார்கள். ஸ்டாலின் விரும்பும் ஒன்றை ஆதரிக்க அழகிரி விரும்பவில்லையாம்.

அழகிரியின் தாக்குதலை விஜயகாந்த் கூட கண்டுகொள்ளவில்லையாம். அதே நேரத்தில் திமுகவையே பிடிக்காத விஜயகாந்தின் மனைவி பிரேமலதாதான் இதுக்குத்தான் திமுக கூட்டணியே வேண்டாம் என்று வீட்டுக்காரரிடம் பொங்கியிருக்கிறார்.

இந்த பொங்கிய கோபத்தின் விளைவுதான் தஞ்சாவூரில், 'எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை" என்ற கேப்டனின் பேச்சு எனக் கூறப்படுகிறது. தஞ்சாவூருக்கு முன்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரில்தான் "கலைஞரின்" பெருந்தன்மை பற்றி விஜயகாந்த் சிலாகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போது சென்னை- மதுரை விமானத்தில் அழகிரியும் விஜயகாந்தும் ஒன்றாகத்தான் வந்திருக்கின்றனர். ஆனால் விமானத்தில் பேசிக் கொள்ளாத இருவரும் ஏர்போர்ட் பேருந்தில் பேசிக் கொண்டனராம். இருப்பினும் அப்போதுகூட அழகிரியை திரும்பிக் கூட பார்க்கவில்லையாம் பிரேமலதா.

திமுக பக்கம் கேப்டன் எட்டிப் பார்த்துவிடக்கூடாது என்ற குழிபறிப்பில் உக்கிரம் காட்டுகிறாராம் அழகிரி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+