ஜெயலலிதாவின் 'ஜனதா சாப்பாடு' திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
சென்னை: சென்னையில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்கும் 1,000 அரசு சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான முறையில் சலுகை விலையில் தரமான உணவு வழங்க சென்னை மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில் நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த உணவகங்களில் ஒரு இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் இந்த உணவகங்களின் பணிகளை சென்னை மாநகராட்சியே கண்காணிப்பதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு வரவேற்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான திமுகவும் இடம் பெற்றுள்ள மத்திய அரசு பின்பற்றும் தவறான தாராளமய பொருளாதாரக் கொள்கை மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளன. மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இத்தகு நிலையில் தமிழக அரசின் இந்தத் திட்டம் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் மற்றும் குடிசைப் பகுதிவாழ் மக்களுக்கு ஓரளவு பயன் தரும் திட்டமாகும்.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி, சென்னை நகரத்தில் 1,000 சிற்றுண்டி உணவகங்களை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்தத் திட்டத்தை இதர மாநகராட்சிகள் மற்றும் அடித்தட்டு உழைப்பாளி மக்கள், பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வாழும் உழைப்பாளி மக்கள், குவியலாக வாழும் மற்ற நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications