ஸ்வீடனில் ரயிலை கடத்தி ஓட்டத் தெரியாமல் அபார்ட்மென்ட்ஸில் மோதிய பெண் துப்புரவு பணியாளர்

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் காலி ரயிலை கடத்தி ஓட்டத் தெரியாமல் 3 அடுக்கு குடியிருப்பு மீது மோதினார்.

ஸ்வீடனில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதி ரயிலை கடத்தி டிப்போவில் இருந்து சுமார் ஒரு மைல் ஓட்டத் தெரியாமல் ஓட்டியுள்ளார். இறுதியில் ரயில் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி 3 அடுக்குமாடி குடியிருப்பின் மீது மோதியது. இதில் அந்த குடியிருப்பு பலத்த சேதமடைந்தது. ரயிலை ஓட்டிய பெண்ணும் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்டாக்ஹோம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர் கையில் சாவி எப்படி கிடைத்தது, அவருக்கு ரயிலை ஸ்டார்ட் செய்ய எவ்வாறு தெரிந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயில் மோதியபோது அந்த 3 அடுக்குமாடி குடியிருப்பில் 3 குடும்பங்கள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாரும் காயமடையவில்லை.

இந்த சம்பவம் ஸ்டாக்ஹோம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+