நடிகை பலாத்கார விவகாரம்: பிரதமரை சந்திக்க மணிப்பூர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் டெல்லியில் முகாம்!

டிசம்பர் 18-ந் தேதி சாண்டல் மாவட்டத்தில் இசை நிகழ்ச்சியில் கலந்து நடிகை மொமோகா கலந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகா ஆயுதக் குழுவின் தளபதியான லிவிங்ஸ்டன், மொமோகாவை தாக்கியதுடன் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மணிப்பூரை உலுக்கியது. மணிப்பூர் திரைப்படத் துறையினர் முழு அடைப்புப் போராட்டத்தையும் நடத்திப் பார்த்தனர். ஆனால் நாகா ஆயுதக் குழுவின் தளபதி கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் மாநில முதல்வர் இபோபிசிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு நேற்று டெல்லி வந்தடைந்தது. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நாகா தளபதியை மணிப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரை இக்குழு நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளது. இந்தக் குழுவில் மணிப்பூரின் எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி இடம்பெறவில்லை.












Click it and Unblock the Notifications