காணும் பொங்கல்: மெரீனாவில் தொலைந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்… பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னை கடற்கரை, தீவுத்திடல் பொருட்காட்சியில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்களைவிட்டு பிரிந்தனர். அவர்களை பத்திரமாக மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காணும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் இரவு வரை உற்சாகமாக பொழுதை கழித்து விட்டுதான் வீடுகளுக்கு திரும்பினர்.
இருட்டை பயன்படுத்தி குற்றவாளிகள் திருட்டு, சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இரவை பகலாக்கும் வகையில் உயர் கோபுர மின் விளக்குகளும் 3 இடங்களில் பொருத்தப்பட்டிருந்தன. 6 இடங்களில் மேடைகளும், 3 இடத்தில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிப்பதற்காக போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதற்காக கடற்கரை பகுதி முழுவதும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். மெரினாவில் பெற்றோரின் பிடியில் இருந்து விடுபட்டு மாயமான 62 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் மாயமான 2 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தீவுத்திடல் பொருட்காட்சியிலும் காணும் பொங்கல் தினத்தில் கூட்டம் அலைமோதியது. அங்கும் மாயமான 35 குழந்தைகளை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. போலீசார் எச்சரிக்கையை மீறி கடலில் இறங்கியவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அமைதியாக முடிந்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications