விசா முறையில் மாற்றம்: இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை குறைகிறது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாணவர் விசாவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் மேற்படிப்புக்காக செல்லக் கூடிய நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இருப்பது இங்கிலாந்து. ஆனால் கடந்த 2012-ம் ஆண்டு மாணவர் விசாவில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மேற்படிப்பு முடிக்கும் மாணவர்கள் கல்வித்தகுதி நிலையில் 20 ஆயிரம் பவுண்ட் சம்பளத்தில் வேலை கிடைத்தால் மட்டும் அங்கு 3 ஆண்டுகள் தங்கலாம் என்பதுதான் புதிய விதி.
இதனால் கடந்த ஆண்டு இந்திய மாணவர் எண்ணிக்கை 30 ஆயிரமாக குறைந்தது. ஆனால் சீன மாணவர்கள் எண்ணிக்கை 79 ஆயிரமானது.
இந்நிலை நீடித்தால் திறன்மிக்க மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கு சென்றுவிடுவர் என்று இங்கிலாந்து அரசுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications