பாகிஸ்தானில் தொடரும் புரட்சி குரல்! மதகுரு காத்ரிக்கு முஷாரப் ஆதரவு!

இது தொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானில் போராட்டம் நடத்தி வரும் காத்ரிக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். அவர் லட்சத்தில் ஒருவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
காத்ரியின் கோரிக்கைகள்தான் என்ன?
பாகிஸ்தானில் புரட்சி பதாகையை ஏந்தியிருக்கும் மதகுரு காத்ரி முன்வைக்கும் கோரிக்கைகள் 4. இந்தக் கோரிக்கைகளை நேற்று இரவுக்குள் நிறைவேற்றவும் அவர் கெடு விதித்திருந்தார்.
- பாகிஸ்தான் அரசியல் சாசனம் 62,63 மற்றும் 218 ஆகிய பிரிவுகளின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும்
- பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் கலைக்கப்பட்டு புதியதாக அமைக்கப்பட வேண்டும்
- மத்திய மற்றும் மாகாண அரசுகளைக் கலைக்க வேண்டும்
- தற்காலிக அரசு என்பது இரு கட்சிகளிடையேயானதாக மட்டும் இருக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது காத்ரியின் கோரிக்கை. காத்ரியின்இந்த கோரிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றுவதாக கூறியுள்ள பாகிஸ்தான் அரசு, மே 15 பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.
காத்ரி ஏற்பாரா? புரட்சிக் குரல் தொடருமா?












Click it and Unblock the Notifications