''ஆதரவு அமைச்சர்கள் கொள்ளையடிக்க வேண்டி இருக்கிறது: அரசை எதியூரப்பா கவிழ்க்கமாட்டார்''
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை வரும் 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. சட்டசபை தேர்தலை அனைவரும் ஒற்றுமையுடன் சந்திக்க உள்ளோம். திப்புசுல்தான் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதில் தவறும் கிடையாது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது.
ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசை எதியூரப்பா கவிழ்க்கமாட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் கொள்ளையடிக்க வேண்டியது இருக்கிறது. மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வருகிற 21-ந்தேதி முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications