''எழுந்திரு நேரமாச்சு''… ஷாக் அடித்து எழுப்பும் அலாரம் டைம்பீஸ்!

Subscribe to Oneindia Tamil

Alarm
அதிகாலையில் எழுவதற்கு அலாரம் வைத்துவிட்டு உறங்குவார்கள். அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டி அதை நிறுத்திவிட்டு பின்னர் உறங்கிவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்காக ஷாக் அடிக்கும் அலாரம் டைப்பீஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இந்தியாவின் இளம் விஞ்ஞானி ஒருவர். சங்கல்ப் சின்ஹா என்ற அந்த 19 வயது விஞ்ஞானி கண்டுபிடித்துள்ள இந்த புதியவகை டைம்பீஸ் ஸ்னூஸ் பட்டனில் ஒரு வோல்டேஜ் மின்சாரம் பாய்கிறது. அலாரம் அடிக்கும் போது அதன் தலையில் தட்டுபவர்களுக்கு சட்டென்று ஷாக் அடிக்கும். இதனால் தூக்கம் கலைந்து அவர்கள் எழுந்து விடுவார்களாம்.

உத்தரபிரதேச மாநிலம் சாரதா பல்கலைக்கழக மாணவரான சங்கல்ப் சின்கா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த அலாரம் டைம்பீஸை கண்டுபிடித்துவிட்டார். ஆனால் லேட்டாகத்தான் இந்த சாதனை வெளி உலகத்திற்குத் தெரியவந்துள்ளது.

ஷாக் அடிக்கும் போது புதுவித சக்தி உடலுக்குள் பரவும். அதற்காகவே இந்த டைம்பீஸை கண்டுபிடித்துள்ளதாக சங்கல்ப் கூறியுள்ளார். ஆட்டோ மொபைல் எஞ்சினியரிங் படித்து வரும் சின்கா, குட் மார்னிங் சிங் இன் ஷாக் என்று அந்த டைம் பீஸிக்கு பெயரிட்டுள்ளார். தன்னுடைய கண்டுபிடிப்பை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக கடிகார நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறார் சங்கல்ப் சின்ஹா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+