மதுரை அரசு பஸ் டிப்போ கண்காணிப்பாளர் திருச்செந்தூரில் தற்கொலை
தூத்துக்குடி: மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போ கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. அவர் மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று திருச்செந்தூர் வந்தார். நள்ளிரவில் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் யூனிபார்முடன் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த பக்தர்கள் திருக்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்ற விபரம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது. இறந்த கருணாமூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கோயில் மண்டபத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications