திருமலை ஏழுமலையான் கோவிலில் 11 டன் நகைகள்… கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

Tirupathi
திருப்பதி: திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் உள்ள மூலவர், உற்சவருக்குச் சொந்தமான நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் பணக்கார கடவுளான திருமலை வெங்கடேசப் பெருமாளைக் காண தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்குள்ள உண்டியலில் பணம், நகை, தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

திருமலை கோவிலுக்கு மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள 11 டன் நகைகள் உள்ளன. இந்த நகைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு நகைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ முன்னிலையில் தொடங்கியது.

ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கப்பெற்ற நகைகள், பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் மற்றும் பாரம்பரிய நகைகள் ஆவணங்களில் உள்ளது போல் சரியாக உள்ளதா? என்பது குறித்து இந்த கணக்கெடுப்பு நடைபெறும்.

இந்த நகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருப்பதை வைத்து கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார், சீனிவாசராஜூ, கோவில் அதிகாரி சென்னங்காரி ரமணா, நகை கணக்குகள் அதிகாரி குருராஜாராவ், கோவில் அதிகாரி கோதண்டராமாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+