சொந்தக்காரங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் இல்லை: காங். காரிய கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம்
ஜெய்ப்பூர்: அம்மா சோனியா காந்தி தலைவராகவும் மகன் ராகுல்காந்தி துணைத் தலைவராகவும் இருக்கும் காங்கிரஸ் கட்சியில், "உறவினர்கள் என்ற அடிப்படையில் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முடியாது" என்ற வினோத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்,
வளர்ந்து வரும் இளம் சந்ததியினர், மற்றும் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்.
நிலையான மற்றும் நல்லாட்சியைத் தந்து மக்களை அணுகுதல்.
நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல்.
கட்சியில், தகுதி அடிப்படையில் இல்லாமல் உறவினர்கள் என்ற அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படக்கூடாது. அப்படி ஒருவரை யாராவது பரிந்துரை செய்தால் தோல்விக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளுடன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் இல்லாதபட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்காமை
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications