சூரியன் உதித்தால் இந்த இருள் மறைந்து விடும்... மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
ஸ்ரீவில்லிபுத்தூர்: மக்கள் உணராமல், தெரியாமல் செய்த தவறால் தற்போது இருளில் தவிக்கிறார்கள். சூரியன் உதித்தால் இந்த இருள் மறைந்துவிடும் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதாக பரவலாக பேசி வருகிறார்கள். அவ்வாறு அது உண்மையானால் தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டாக திமுகவுடன் தொடர்பில் இல்லாத மாற்றுக்கட்சித் தலைவர்கள் கூட தற்போது திமுகவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவுடன் தொடர்பில் உள்ளார்கள். இது தேர்தலுக்கு நல்ல அறிகுறி.

திமுக சிறந்த சக்தியாக உள்ளது. சட்டப் பேரவையில் திமுக எதிர்கட்சியாக இல்லாவிட்டாலும் கூட மக்கள் மன்றத்தில் திமுக எதிர் கட்சியாக உள்ளது.

ஆளும் கட்சியினருக்கே தெரியவில்லை, நாம் ஆளும் கட்சியா? அல்லது தி.மு.க. ஆளும் கட்சியா? என்று. அந்த அளவிற்கு திமுகவின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா கூறினார். கடமை, கண்ணியத்தை விட கட்டுப்பாடு இளைஞர் அணியினருக்கு மிகவும் முக்கியமானது. தற்போது தமிழகம் எங்கும் அடுத்து கருணாநிதிதான் முதல்வர் என பேசுகிறார்கள். மக்கள் உணராமல், தெரியாமல் செய்த தவறால் தற்போது இருளில் தவிக்கிறார்கள். சூரியன் உதித்தால் இந்த இருள் மறைந்துவிடும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+