90% சாதி அடிப்படையில் வாக்களிக்கின்றனர்: மார்க்கண்டேய கட்ஜூ கவலை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தேர்தலில் 90% பேர் சாதி அடிப்படையில் மட்டுமே வாக்களிக்கின்றனர். இதனால் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்கூட தேர்தலில் வென்றுவிடுகின்றனர். இப்படி செய்பவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமல்ல.. படித்தவர்களும் கூட இப்படித்தான் சாதி பார்த்து ஓட்டுப் போடுகின்றனர்.
எனது நீதிமன்ற அனுபவத்தில், அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களே சாதி அடிப்படையில் வாக்களிக்கும் நிலையை கண்டிருக்கிறேன். இதேபோல் சில கல்லூரி பேராசிரியர்களும்கூட இந்த தவறை செய்கின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இது தொழில் சார்ந்த சமூகத்தை கொண்டது. பிரபுத்துவ முறையை நாம் பின்பற்றவில்லை. இதுபற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications