‘மிஸ்டர் இந்தியா’ முன்னாள் சாம்பியன் தூக்குபோட்டு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

Rex Varghese
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன் ஒருவர் குடும்ப பிரச்சினையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் அருகே கொரட்டி பகுதியை சேர்ந்தவர் ரெக்ஸ் வர்க்கீஸ் வயது 34 . நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது சுய முயற்சியினால் பாடி பில்டிங் செய்து தமது உடலை அழகுபடுத்தினார். ஜூனியர் சாம்பியன், ஜூனியர் மிஸ்டர் , மிஸ்டர் கேரளா, மஸல்மேன் ஆப் கேரளா, ஒலிம்பியா சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார்.

கடந்த 2007 மிஸ்டர் இந்தியா ( பாடி பில்ட் 90 கிலோ ) பிரிவில் பட்டம் பெற்றார். இளம் வயதில் இருந்தே பல்வேறு விருதுகளை பெற்றுவந்த இவர் சில காலம் ரயில்வேயில் டிக்கெட் கலெக்டராக இருந்துள்ளார்.

தற்போது வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்த வர்க்கீஸ் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+