ராஜினாமா செய்யத் தயாராக 15 எதியூரப்பா எம்எல்ஏக்கள்.. 2 அமைச்சர்கள் விலகல்!

Subscribe to Oneindia Tamil

Shobha Karandlaje and Yeddyurappa
பெங்களூர்: கர்நாடக பாஜக அரசுக்கு மேலும் தலைவலி தரும் வகையில், எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளர்களான இரு அமைச்சர்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் உதாசி, மின்துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே ஆகியோ தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் வழங்கினர்.

மேலும் இந்தக் கடிதத்தின் நகல்களை ஆளுநர் பரத்வாஜுக்கும் அவர்கள் அனுப்பி வைத்தனர்.

இவர்கள் தவிர மேலும் 15 எதியூரப்பா ஆதரவு பாஜக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறுவதைத் தவிர்த்து அரசைக் காப்பாற்றுவதற்காக சபாநாயகர் போபையா திடீரென நேற்றிரவு நேபாளம் டூர் போய்விட்டது குறிப்பிடத்தக்ககது.

ஆனால், இதையும் மீறி நேரடியாக கவர்னருக்கே ராஜினாமா கடிதத்தை அனுப்ப எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே எதியூரப்பா உள்பட 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது மேலும் எம்.எல்.ஏக்கள் விலகும் பட்சத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 2008ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது. இதன் மூலம் தென் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் 4 ஆண்டுகளில் எதியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதம் முடிவடைகிறது.

இந் நிலையில் இந்த அரசும் கவிழும் நிலை உருவாகி உள்ளது.

இதையெல்லாம் மீறியும் வரும் பிப்ரவரி 8ம் தேதி நான் பட்ஜெட் தாக்கல் செய்தே தீருவேன் என்கிறார் முதல்வர் ஷெட்டார். அதற்குள் அரசைக் கவிழ்க்க எதியூரப்பா முயன்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+