மணமேடைக்கு வர மறுத்த மணமகள், வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போது மணமகள் திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்ததால் மணமகன் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள வி. தெற்குணத்தைச் சேர்ந்தவர் விமல் அழகன் (27). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவில்பட்டைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகள் புவனாவுக்கும் (21) பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கண்டமங்கலம் அருகே உள்ள பிடாரிபட்டுவில் உள்ள தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று மாலையே மணமகன் மற்றும் மணமகள் உறவினர் சகிதமாக திருமண மண்டபத்திற்கு வந்து தங்கினர். இன்று காலை புவனாவை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர் வர மறுத்தார். ஏன் என்று கேட்டதற்கு தனக்கு திருமணம் வேண்டாம் என்றார். அதற்கான காரணத்தை சொல்ல அவர் மறுத்தார்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து மணமகளை சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லை. புவனாவின் வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது, திருமணமும் நின்று போனது.

பின்னர் அதே மேடையில் பானாம்பட்டுவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணுக்கும் விமலுக்கும் திருமணம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+